தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானைகளை விரட்ட கோரி வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தர்ணா

தொண்டாமுத்தூர் : கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை, மத்திப்பாளையம், குப்பனூர், பச்சாபாளையம், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் கரடிமடை, மத்திபாளையம் பகுதியில் 7க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
Advertisement

யானைகளை விரட்ட தகவல் கொடுத்தும் வனத்துறையினர் மெத்தன போக்கு காட்டி வருவதாகவும், விவசாயிகள் யானைகளை விரட்டினால் அவர்களை மிரட்டி பொய் வழக்கு போடுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.இதற்கிடையே, சிறுவாணி சாலை மாதம்பட்டி தண்ணீர்பந்தல் நால் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை அவ்வழியாக வந்த வாகனங்களை சிறைபிடித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தர்ணாவின்போது நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டு தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பேரூர், ஆலாந்துறை தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் விரைந்துவந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, விவசாயிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது, விவசாய நிலங்களை பாதுகாக்கவும், யானைகளை விரட்ட வனத்துறை ஊழியர்களை அதிக அளவில் இப்பகுதியில் நியமிக்க உள்ளதாக உறுதி அளித்தார். இதை ஏற்று மறியலை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் திடீர் தர்ணா, மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement