தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

சென்னை: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கியது.

Advertisement

அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு திட்ட (சிஏஎஸ்) ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குவது, யுஜிசி நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்பில் மற்றும் பிஎச்டி பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த போராட்டம் நடத்த்ப்படுகிறது.

ஏயுடி தலைவர் பேராசிரியர் காந்திராஜ் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 4 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறது. தற்போது நடைபெறும் 3 நாள் தொடர் போராட்டத்துக்குப் பின்னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக டிசம்பர் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமும் அதை தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்தி போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News