தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடலூர் பகுதியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை

கூடலூர்: கூடலூர் பகுதியில் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மின் கம்பிகளின் மீது மரங்கள் விழுவதால் மின் கம்பிகளும் அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது போன்ற ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அவற்றின் கிளைகளை வெட்டி அகற்றுவது, தேவைப்பட்டால் மரங்களை முழுமையாக வெட்டி அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை பருவமழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

சாலை ஓரங்களில் இன்னும் பல இடங்களில் மழைக்காலத்தில் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீடுகள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் மீது விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் தொடர்ச்சியாக பெய்த காற்றுடன் கூடிய மழை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் அடித்தது. கூடலூர் பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.