தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் சிறுமியை கொன்று சூட்கேசில் அடைத்த கொடூரம்; பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

புதுடெல்லி: வடமேற்கு டெல்லியில் உள்ள நேரு விகார் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில், அருகில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றார். ஐஸ் கொடுப்பதற்காக அங்கு சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவளைத் தேடத் தொடங்கினர்.தங்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு சிறுமி இல்லை. இதனிடையே, சிறுமி உறவினரின் வீட்டில் ஐஸ் கொடுத்துவிட்டு, 5 நிமிடத்தில் அங்கு புறப்பட்டு விட்டதாகவும், அவள் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றதை பார்த்ததாகவும் யாரோ ஒருவர் சிறுமியின் தந்தையிடம் கூறினார். இதையடுத்து, அவர் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்றார். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரத்தக் கறையுடன் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதை கண்டு பயந்துபோன சிறுமியின் தந்தை பதற்றத்துடன் சூட்கேசை திறந்து பார்த்தார். அதில், தனது மகள் ரத்த வெள்ளத்தில் சுயநினைவை இழந்து கிடப்பதை கண்டு கதறி துடித்தார்.
Advertisement

சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சிறுமியை அருகில் உள்ள சிறிய கிளினிக்குக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த மருத்துவர் சிறுமியை உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இதையடுத்து, சாஸ்திரி பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், சிறுமியின் உடலில் இருக்கும் காயங்களை பார்க்கிறபோது, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குற்றவியல் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் வரவழைத்து, ஆதாரங்களை சேகரித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளியை கைது செய்யப்ப பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்றனர்.

 

Advertisement