டெல்லியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: கும்பலுக்கு வலை
புதுடெல்லி: பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரை அவரது தோழி, கடந்த 10ம் தேதி ஆண் நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்காக அழைத்து சென்றார். அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு மதுவில் போதைப்பொருள் கலந்து கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆண்கள் சிலர், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
போதை தெளிந்து வீட்டிற்கு வந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.