தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த டெல்லி சாமியார் கைது

புதுடெல்லி: 17 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். டெல்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்தியா மேலாண்மை நிறுவனம் என்ற தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் நிர்வாகியாக சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பொறுப்பு வகித்து வந்தார்.

Advertisement

இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, மாணவிகளை அத்துமீறி தொடுவது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார். இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது 17 மாணவிகள் சைதன்யானந்த சரஸ்வதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். இந்த புகாரின் அடிப்படையில் சைதன்யானந்த சரஸ்வதிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த சைதன்யானந்த சரஸ்வதி டெல்லியில் இருந்து தப்பி தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து சாமியார் சைதன்யானந்த சரஸ்வதிக்கு தொடர்புடைய ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளை காவல்துறை முடக்கியது. இந்நிலையில் ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் மறைந்திருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement