தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் அக்.18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

 

Advertisement

டெல்லி: டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. டெல்லியில் காற்று மாசு தீவிரமாக நிலவும் நிலையில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியது. பசுமை பட்டாசுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

அனுமதிக்கப்பட்ட 4 நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பசுமை பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறைந்துள்ளதால் அவ்வகை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர். பகுதியில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்.

பசுமை பட்டாசு உற்பத்தியை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். . பசுமை பட்டாசுகளுக்கான க்யூஆர் கோடுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். போலி பட்டாசுகள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement