தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டெல்லியில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை: இருவர் கைது

டெல்லி : டெல்லியில் வாகன பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை செய்யபட்டார். நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியின் நிஜாமுதீன் காவல் நிலையப் பகுதியின் ஜங்புரா போகல் பஜார் பாதையில் இரவு 11 மணியளவில் வாகன பார்க்கிங்கில் ஆசிப் குரேஷிக்கும் ஜுஜ்ஜாலா மற்றும் கௌதம் ஆகியோர் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. ஆசிப் குரேஷி தனது வீட்டின் வாயிலுக்கு வெளியே ஸ்கூட்டரை நிறுத்த வேண்டாம் என ஜுஜ்ஜாலா, கௌதம் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கூர்மையான பொருளால் ஆசிப் மார்பில் தாக்கப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிப் உடனடியாக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலை செய்த ஜுஜ்ஜாலா (19) மற்றும் கௌதம் (18) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு இருவர் மீதும் வழக்குப்பத்திவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தனது கணவர் வேண்டுமென்றே கொல்லப்பட்டதாக ஆசிப் குரேஷியின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

Related News