டெல்லியில் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி
Advertisement
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "டெல்லியில் தற்போதுள்ள பட்டாசு தடை என்பது கண்துடைப்பாக உள்ளது. மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தருவது அடிப்படை உரிமை. மக்கள் உடல்நலனுக்கு கேடு உண்டாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. டெல்லியில் பட்டாசு வெடிக்க பண்டிகை காலங்களில் மட்டும் தடை விதித்தால் போதாது; திருமணம், தேர்தல் நேரங்களிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக் கூடாது? ஜனவரி ஒன்றாம் தேதி வரை தற்போது தடை உள்ளது: அதனை ஆண்டு முழுவதும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். நவம்பர் 25ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு டெல்லி அரசுக்கும், டெல்லி தலைநகர் பகுதி மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது, "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Advertisement