தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டெல்லிக்கு வந்துள்ள சீன அமைச்சர்; மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு: 7 ஆண்டுகளுக்கு பிறகு 31ம் தேதி பிரதமர் பயணம்

புதுடெல்லி: கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று அவரை சந்திக்கிறார்.பிரதமர் மோடி, கடந்த ஏழாண்டுகளில் இல்லாத வகையில் தனது முதல் சீன பயணமாக, வரும் 31 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை செல்லவுள்ளார். தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்.சி.ஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். மோடி பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நேற்று மாலையும், எல்லைப் பிரச்னை தொடர்பான 24வது சுற்று சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இன்று காலை அஜித் தோவலுடனும் நடைபெறுகிறது.

தொடர்ந்து, வாங் யீ இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, எஸ்.சி.ஓ உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் இந்திய-சீன உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலையும் வாங் யீ மற்றும் ஜெய்சங்கர் இறுதி செய்ய உள்ளனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News