தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளை வேட்டையாட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

டெல்லி: டெல்லியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமுமான செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை சிறந்த புலனாய்வு அமைப்புகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அனைத்து கோணங்களிலும் முழு வீச்சுடன் இந்த சம்பவம் குறித்து சிறந்த புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (நவ. 11) கர்தவ்ய பவனில் உயர் மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டெல்லியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஒவ்வொருவரையும் வேட்டையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News