தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையில் தீவிர வாகன சோதனை: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை: தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் மேற்பார்வையில் பெருநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement

குறிப்பாக என்ஐஏ வழக்கு தொடர்பாக கண்காணிப்பு பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் குற்றப்பின்னணியில் உள்ள நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement