தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி புறப்பட்ட விமானத்தில் ‘போர்டிங் பாஸ்’ பெற்ற பயணி மாயம்: லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு

லண்டன்: போர்டிங் பாஸ் பெற்ற பயணி விமானத்தில் இல்லாததால், லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்திலிருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 162, நேற்று ஓடுதளத்திலிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் புறப்படத் தயாரான நிலையில், பயணிகளின் எண்ணிக்கையைச் சரிபார்த்தபோது, போர்டிங் பாஸ் பெற்ற பயணி ஒருவர் விமானத்தில் இல்லாதது தெரியவந்தது.

Advertisement

விசாரணையில், அந்தப் பயணி போர்டிங் பாஸை ஸ்கேன் செய்த பிறகு, புறப்பாடு பகுதிக்குச் செல்வதற்குப் பதிலாக, தவறுதலாக வருகைப் பகுதிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. விமானப் பயணப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஒரு பயணியும் அவரது உடைமைகளும் ஒரே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, விமானம் மீண்டும் நிறுத்தப்பட்டு, அந்தப் பயணியின் உடைமைகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன. இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில், அந்தப் பயணி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்ட போதிலும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News