தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு மின்னணு வருகை அட்டை: இன்று அறிமுகம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் தங்கள் வருகைத் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வகையில் மின்னணு வருகை அட்டை இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அவர்களின் பாஸ்போர்ட் எண், வருகைக்கான விவரம், தங்குமிடம், முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்ற தகவல்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் தரப்படும் படிவத்தில் நிரப்பித் தர வேண்டும்.

Advertisement

டெல்லி விமான நிலையத்தில் இந்த நடைமுறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு பயணிகளுக்கு இ வருகை அட்டை வழங்கும் வசதி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து டெல்லி விமான நிலைய பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் டயல் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இனி டெல்லி விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் டிஜிட்டல் முறையில் அவர்களின் வருகை தகவல்களை பதிவு செய்யலாம்.

இந்த பயணிகள் நீண்ட வரிசையில் காக்க வேண்டியதை தவிர்க்கும். காகித பயன்பாட்டை குறைக்க முடியும். பயணிகள் 3 நாட்களுக்கு முன்பாக கூட இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் இதே போன்ற இ வருகை அட்டை வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News