தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு முககவசம் அணிந்து சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி எம்பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், நவீன முகக்கவசம் அணிந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எங்கள் எதிர்காலத்தை நெரிக்காதீர்கள்’, ‘சுத்தமான காற்று ஒரு உரிமை, ஆடம்பரம் அல்ல’ போன்ற எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

சோனியா காந்தி கூறுகையில், காற்று மாசுவினால் குழந்தைகள் இறக்கிறார்கள், என்னை போன்ற வயதானவர்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர் என்றார். பிரியங்கா காந்தி,தலைநகரில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்தோம். இது அரசியல் பிரச்னை அல்ல. எனவே அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் அரசுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றார்.

Advertisement