தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி முதல் ராஜஸ்தான் வரை தலைமை நீதிபதி தலைமையில் 20 நீதிபதிகள் ஜாலி பயணம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர், தங்களது குடும்பத்தினருடன் அரசு மரியாதைகளைத் தவிர்த்து, சொகுசுப் பேருந்தில் சுற்றுலா சென்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் 20 நீதிபதிகள், தங்கள் குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Advertisement

டெல்லியில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரந்தம்பூருக்கு, வாடகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு வால்வோ சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்தனர். அரசு சார்பில் வழங்கப்படும் வாகனங்கள், சைரன் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்த்து, அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர். ராஜஸ்தானின் பின்ஹான் என்ற இடத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் மீதமுள்ள 14 நீதிபதிகள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை.

நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நீதிமன்றத்தின் சம்பிரதாய சூழலுக்கு வெளியே இயல்பாகப் பழகிக்கொள்ளும் வகையில், கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுபோன்ற பயணங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய பயணத்தை தலைமை நீதிபதி கவாய் முன்னெடுத்துள்ளார்.

Advertisement

Related News