தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. அசால்டாக டீல் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!!

டெல்லி : டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் காலணியை வீசியுள்ளார். அப்போது பாதுகாவலர் ஒருவர் உடனடியாக அந்த காலணியை தடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

பின்னர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நீதிமன்ற காவலர்கள் அப்புறப்படுத்திய போது, இந்துஸ்தானில் சனாதனம் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த வழக்கறிஞர் முழக்கமிட்டுள்ளார். இதனிடையே இது போன்ற சம்பவங்களால் தனது கவனத்தை யாரும் சிதறடிக்க முடியாது என்றும் இது தன்னை பாதிக்காது என்றும் கூறிய தலைமை நீதிபதி பி.ஆர்.க்வாய், வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு, எந்த பதற்றமும் அடையாமல் வழக்கு விசாரணை பணியை தொடர்ந்துள்ளார். காலணியால் தாக்க முற்பட்ட வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement