தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் செயற்கை மழை திட்டத்தை நிறுத்தி வைத்தது டெல்லி அரசு !!

டெல்லி : செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டத்தை டெல்லி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக குளிர்காலத்தில் காற்றில் கலந்துள்ள அடர்த்தியான காற்று மாசுவை கலைப்பதற்காக செயற்கை மழையை பெய்விக்க டெல்லி அரசு திட்டமிட்டது. இதையடுத்து, செயற்கை மழையை உருவாக்க டெல்லி பாஜக அரசு, கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சாதகமான வானிலை தென்பட்டதால், மேக விதைப்பு சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

உத்தர பிரதேசம் கான்​பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்​லிக்கு புறப்​பட்​டது. சுமார் 6,000 அடி உயரத்​தில் பறந்த இந்த விமானம், டெல்​லி​யின் புராரி, விஹார், கரோல் பாக் உள்​ளிட்ட இடங்​களில் திரண்​டிருந்த மேகங்​கள் மீது சில்​வர் அயோடைடு, சோடி​யம் குளோரைடு, பொட்​டாசி​யம் அயோடைடு ஆகிய ரசாயனங்​கள் தெளிக்​கப்​பட்​டன. இருந்தாலும் மழை பொழியவில்லை. மொத்தம் மூன்று முறை இவ்வாறு மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் திட்டத்தை நிறுத்திவைப்பதாக டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டது. செயற்கை மழைக்குத் தேவையான ஈரப்பதம் 50 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் 15 முதல் 20 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் மட்டுமே உள்ளதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement