தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் கழுத்தறுத்து கொலை: இளைய மகனுக்கு போலீஸ் வலை

டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் கழுத்தறுத்து கொடூர கொலை செய்யப்பட்டுள்ளனர். மாயமான இளைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தெற்கு டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் (45). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரஜனி (40). இவர்களுக்கு ரித்திக் (24), சித்தார்த் (22) என்ற மகன்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், பிரேம்சிங், ரஜனி, ரித்திக் ஆகியோர் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 3 பேரின் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தனர். தலை கல்லால் நசுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டதில் இளைய மகன் சித்தார்த்தை காணவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். அவரை காணவில்லை. அவர்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கண்டுபிடித்தால்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்ற முழு விவரம் தெரியவரும். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement