தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் சிறுவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் : ஒன்றிய அரசு வாதம்

டெல்லி : பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லியில் தீபஒளி திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளின்போது பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. தீபெஒளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின்போது இந்த விதிமுறைகள் பொருந்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா தெரிவித்தார்.

Advertisement

புதிய விதிமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக அனுமதிக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. பட்டாசு தடை காரணமாக தீபஒளி பண்டிகை நாட்களில் காற்று மாசு குறைந்து காணப்படுகிறது என்றும் எனவே மீண்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement