தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து: நாளை பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் கூட இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற டெல்லி கார் வெடிப்பு சம்பவமானது தீவிரம் அடைந்திருக்கிறது. அமித்ஷா மத்திய உள்துறை தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழுக்கூட்டம் நடைபெற்றது. உளவுத்துறை டிஜி, டெல்லி காவல் துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் என பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

Advertisement

இந்த கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் கட்ட அறிக்கை அமித்ஷா விடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு மத்திய அமைச்சர் அவையின் பாதுகாப்பு கூட்டமானது நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரச்சனைக்கு கரணம் என்ன? அதாவது டெல்லி குண்டு வெடிப்பு பாதுகாப்பு குறைபாடா அல்லது உளவுத்துறை தகவலில் ஏதேனும் பிழையிருக்கிறதா..?

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பல்வேறு விஷியங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட நேரத்தில் அமைச்சரவையில் அவசர பாதுகாப்பு குழு கூட்டமானது கூட்டப்பட்டது. அந்த தாக்குதலுக்கு எப்படி பதிலடிகொடுக்க வேண்டும். என்ன நடந்தது என்று குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேபோல ஒரு சூழல் தான் ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை இந்த குழுவானது கூட இருக்கிறது.

இந்த குழு கூட்டம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பூட்டன் சென்றிருக்கிறார். இருப்பினும் அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்பர். இன்று அவரிடம் பகிரப்பட்ட அனைத்து தகவல்களையும் நாளை அமைச்சரவை கூட்டத்தில் அவர் முன்வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News