தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு; ‘இது தற்கொலை தாக்குதல் அல்ல... தியாகம்’: தீவிரவாதி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

புதுடெல்லி: செங்கோட்டை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதி, தனது செயலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செங்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட கோர குண்டுவெடிப்புத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர் டாக்டர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில், அவர் தாக்குதலுக்கு முன்னர் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி காவல்துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு ஆதாரமாக சிக்கியுள்ளது.

Advertisement

இது தீவிரவாத அமைப்புகளின் நீண்டகால திட்டமிடலையும், உமர் எந்த அளவிற்கு தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் அம்பலப்படுத்துவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். அந்த வீடியோவில் தனது செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ள உமர், ‘சாதாரணமாக தற்கொலைப்படைத் தாக்குதல் என்று அழைக்கப்படுவது தற்கொலை அல்ல; அது கொள்கைக்காக செய்யப்படும் தியாகச் செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, இளைஞர்களைத் தவறான பாதைக்குத் திசைதிருப்பி, தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆள்சேர்க்கும் பிரசார கருவியாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், இந்த வீடியோ முக்கிய சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News