தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் : பிரதமர் மோடி

திம்பு: டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

டெல்லியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று செங்கோட்டை. செங்கோட்டையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இப்பகுதியில் டெல்லி பழைய மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். எனவே செங்கோட்டை பகுதியில் எப்போதுமே உயர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், நேற்று மாலை 6.55 மணி அளவில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் நுழைவாயில் அருகே கார் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் புறப்பட்டார். பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:

திங்கட்கிழமை மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் ஆழமாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நான் புரிந்துகொள்கிறேன். முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த சதித்திட்டத்தின் மூலத்தை புலனாய்வு அமைப்புகள் விரைவில் கண்டுபிடிக்கும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களைத் தப்ப விட மாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார்.

Advertisement

Related News