தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு..கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பு: அவதியில் மக்கள்..!!

டெல்லி: மிக மோசமான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது டெல்லி. தலைநகர் டெல்லியில் காற்று மிக பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த காற்று மாசு பிரச்சனைக்கு டெல்லி அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில், காற்று மாசை குறிக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது. அவ்வகையில் டெயில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க உத்திர பிரதேசம் கான்பூரில் உள்ள ஐஐடி உடன் டெல்லி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் செயற்கை மழை முயற்சி நிறுத்தி வைக்கப்படுவதாக கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி அன்று டெல்லியில் காற்று தரக்குறியீடு 359ஆக பதிவானது. ஆனால் இந்த ஆண்டு 450ஐ கடந்தது. இது தேசிய சராசரியை விட 1.8 மடங்கு அதிகமாகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 370ஆக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்று தரக்குறியீடு மிக மோசமான 459ஆக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு சுவாச கோளாறு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement