தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதிவாசி மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்

*முன்னாள் எம்எல்ஏ ஆய்வு

Advertisement

பந்தலூர் : பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள அரசு வீடுகளை முன்னாள் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா எழுவது செட் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு அரசு வீடுகள் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

அந்த வீடுகளில் தற்போது மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரைக்கும் அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி, நடைபாதை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமல் மண்ணெண்ணெய் விளக்குகளை வைத்து படிக்கின்றனர்.

இந்நிலையில் ஆதிவாசி மக்களின் சிரமம் குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 8ம் தேதி செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி அப்பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

Advertisement

Related News