அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது அவதூறு பதிவு: டிஜிபி அலுவலகத்தில் புகார்
Advertisement
இதையடுத்து பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் குருக்கள் கோமதிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்குரியது. ஆனால், இந்த பிரச்னையை மடைமாற்றும் விதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகை, இந்து முன்னணி, பாஜ, சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். எனவே இதுபோன்ற அவதூறு கருத்துகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement