வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது
டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இன்று (27-10-2025) அதிகாலை 02.30 மணியளவில் புயல் உருவானது. சென்னைக்கு 600 கி.மீ தென் கிழக்கிலும், காக்கிநாடாவுக்கு 680 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டனத்துக்கு 710 கி.மீ. தொலைவிலும் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-வடமேற்கு வங்காள விரிகுடாவில் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன் பிறகு அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (அக்டோபர் 28) காலைக்குள் ஒரு கடுமையான புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28 ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள ஆந்திரப் பிரதேசம் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஒரு கடுமையான சூறாவளி புயலாகக் கடக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவானதை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.