தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்கள் பறிப்பு கூடுதல் ஐஜி சுதா மால்யா முகத்தில் தாலி வீச்சு: முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது போலீஸ் வழக்கு

சென்னை: பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்திற்குள் புகுந்து கூடுதல் ஐஜி சுதா மால்யா முகத்தில் தாலியை வீசி எறிந்து, ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது பட்டினப்பாக்கம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி சுதா மால்யா (58) பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் ஐஜியாக பணியாற்றி வருகிறேன். எனது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா என்பவர் நீர்நிலை இடங்களை சட்டத்திற்கு எதிராக தனியாருக்கு பதிவு செய்ததாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement

பின்னர் அவர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் பணியில் இருந்து நிரந்தரமாக கடந்த 26.6.2023 அன்று நீக்கப்பட்டார். அவர் பணி நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்று போன் செய்து அடிக்கடி தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி எனது அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (27ம் தேதி) பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து, அத்து மீறி எனது அறைக்குள் புகுந்து தகாத வார்த்தையால் பேசி எனக்கு நடக்கிற கெடுதல் அனைத்துக்கும் நீதான் காரணம். எனது தாலியை அறுக்கிறதற்கு தான் நீ உக்காந்திருக்கிற, இந்தா தாலி என அவர் பையில் வைத்திருந்த தாலியை எடுத்து முகத்திற்கு நேராக வீசினார்.

சிவபிரியா தற்போது பணியில் இல்லாததால் நான் அவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. என் மீது தாக்குதல் நடத்திய போது அவர் மீதான நீதிமன்ற வழக்கு தொடர்பான ஆவணங்களையும் எடுத்து சென்று விட்டார். அதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது. எனவே அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து அரசு அதிகாரியை பணி செய்ய விடாமால் தடுத்த முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரின்படி பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்தில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கூடுதல் ஐஜி சுதா மால்யா மீது தாலியை வீசி எறிந்தது உறுதியானது. அதைதொடர்ந்து பட்டினப்பாக்கம் போலீசார் சிவபிரியா மீது பிஎன்எஸ் 132, 332(சி), 351(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், அவர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News