தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் கொடுத்த நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்; தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான வீடியோ, கடிதம் சிக்கியது

பேரணாம்பட்டு: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டிய நிலையில், கடன் தொல்லையால் செல்போனில் உருக்கமான வீடியோ பதிவிட்டும், கடிதம் எழுதி வைத்தும் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியை சேர்ந்தவர் அன்சர்(58), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மும்தாஜ்(50). இவர்களது மகன் இம்ரான்(24), வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ஷாவுக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. அர்ஷா 5 மாத கர்ப்பிணியாக உள்ளதால் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்சர் பல இடங்களில் கடன்கள் வாங்கி உள்ளார். அதை திரும்ப செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அவர் சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அன்சர் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வந்து கடன் தொகையை செலுத்தும்படி மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மும்தாஜ், மகன் இம்ரான் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தனர். நேற்று மதியம் 12 மணி ஆகியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இம்ரான்,அவரது தாய் மும்தாஜ் ஆகிய இருவரும் மின்விசிறிகளில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். தகவலறிந்து பேரணாம்பட்டு போலீசார் வந்து விசாரித்தனர். இம்ரானின் செல்போனை ஆய்வு செய்ததில் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதில், ‘நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை. என்னிடம் கடன் ெதாகையை கேட்டு தொந்தரவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? கடன் கொடுத்தவர்கள் என் அப்பாவிடம் கேளுங்கள். ஆனால் என்னை தொந்தரவு செய்வதால் வாழ முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும் மும்தாஜ் எழுதிய கடிதத்தில், ‘கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்யும் நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் கும்பலாக வந்து எங்களை மிரட்டினர். இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதி வைத்துள்ளார். இதன்படி அவர்களை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement