தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.15 லட்சம் கடன் வாங்கிய அண்ணன் ஓட்டம் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தம்பி வெட்டி படுகொலை: பாஜ நிர்வாகி கைது

ஒரத்தநாடு: அண்ணன் வாங்கிய கடனுக்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தம்பியை வெட்டி படுகொலை செய்த பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல்(38). இவர், 2 ஆண்டுகளுக்கு முன் பேராவூரணி வடக்கு ஒன்றிய பாஜ தலைவரான, மேட்டுவயல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரிடம் (39) ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

பணத்தை தராமல் சக்திவேல் கடந்த ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்துள்ளார். இதுதொடர்பாக ராஜேஷ்குமார் பலமுறை சக்திவேல் குடும்பத்தினரிடம் வந்து பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29), கடந்த 20 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். தகவலறிந்து ராஜேஷ்குமார், ேநற்றுமுன்தினம் இரவு சக்திவேல் வீட்டுக்கு சென்று பிரகதீஸ்வரனிடம், அண்ணன் வாங்கிய ரூ.15 லட்சம் கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஷ்குமாரை தேடி வந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement