தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் பிரச்னையில் சிக்கியதால் திருத்தணி தனியார் விடுதியில் சென்னை நபர் தற்கொலை: மாத்திரைகள், கடிதம் சிக்கியது

திருத்தணி: சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் விஜயன் (42). இவர் தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன் திருத்தணி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் விஜயன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், இன்றுகாலை விஜயன் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வந்ததால் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு பின்னர் விடுதி நிர்வாகிகள், மாற்று சாவி மூலம் விஜயன் தங்கியிருந்த அறையைத் திறந்து பார்த்தபோது படுக்கையில் விஜயன் சுயநினைவற்று கிடந்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது விஜயன் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இதனிடையே போலீசார் வந்து விஜயனின் அறையில் சோதனை நடத்தியபோது படுக்கையில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘’கடன் தொல்லையால் எனது வாழ்க்கை சிதைந்துவிட்டது. இதன்காரணமாக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். தன்னை குடும்பத்தினர் மன்னித்து விடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுசம்பந்தமாக திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News