தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!

இமாசல பிரதேசம்: இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி பெய்து வரும் அதிகளவிலான மழையால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் தொடர்ச்சியாக, கால்நடைகள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நீர் விநியோக திட்டங்கள், சாலைகள், மின்சார உட்கட்டமைப்புகள், பள்ளிகள், சுகாதார நலன், விவசாயம் மற்றும் வீட்டு வசதி சார்ந்த விசயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 493 சாலைகள், 1,120 மின்மாற்றிகள் மற்றும் 245 நீர் விநியோக திட்டங்கள் பாதிப்படைந்து உள்ளன.

இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 199 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஆகஸ்டு 6 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டவையாகும். வானிலை தொடர்பான உயிரிழப்புகளில் 17 பேர் மேகவெடிப்பாலும், 20 பேர் நீரில் மூழ்கியும், ஒருவர் மின்சாரம் தாக்கியும், 9 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கியும் மற்றும் 6 பேர் நிலச்சரிவிலும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கீழே விழுந்தும், நெருப்பு, மின்னல் தாக்கியும் மற்றும் பிற மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 91 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

 

Related News