தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிமிஷா பிரியா விரைவில் விடுதலை?: மதபோதகர் கிளப்பிய புதிய பரபரப்பு

புதுடெல்லி: ஏமனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிமிஷா பிரியா விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனறு மதபோதகர் கூறிய தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டில் பணியாற்றி வந்தார். அங்கு, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தலாலைக் கொலை செய்து, அவரது உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார்.
Advertisement

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஷரியா சட்டப்படி, கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நிமிஷா பிரியா விடுதலை ஆக முடியும் என்பதால், ‘தியா’ எனப்படும் ரத்தப் பணம் கொடுத்து அவரை விடுவிக்க ஒன்றிய அரசும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கிறிஸ்தவ மதபோதகரான கே.ஏ.பால் அளித்த பேட்டியில், ‘நிமிஷா பிரியா விரைவில் விடுதலை செய்யப்படுவார். ஏமன் அதிகாரிகள் மற்றும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியதின் பயனாக நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த முயற்சிக்கு முழு ஆதரவளித்த பிரதமர் மோடி, ஒன்றிய அரசு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். கே.ஏ.பாலின் இந்த அறிவிப்பு, மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவின் விடுதலை தொடர்பான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

Advertisement