தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு

*எலும்பு கூடாக கண்டெடுப்பு

Advertisement

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது.வனப்பரப்பு மிகுந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது.

இந்நிலையில் இக்காப்பகத்திற்கு உட்பட்ட உள் மண்டல பகுதியான ஊட்டி கோட்டம், கார்குடி வனச்சரகம், கும்பாரக்கொல்லி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது கல்லள்ளா பள்ளத்தில் காட்டு யானை ஒன்று இறந்து அதன் உடல் மக்கி போய் எலும்பு கூடாக கிடந்ததை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலின் பேரில் துணை இயக்குநர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர் சரவணன், வனப்பணியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் இறந்து கிடந்தது பெண் யானை என்பதும், வயது சுமார் 35 இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இறப்பிற்கான சரியான காரணம் அறிய முடியவில்லை என்பதால் பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News