தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என்று அறிவித்த அண்ணாமலைக்கு நயினார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம்: டெல்லி தலைமைக்கும் புகார் தெரிவித்தனர்

சென்னை: கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்த அண்ணாமலைக்கு நயினார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி தலைமைக்கும் புகார் அளித்தனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ எந்த பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையிலேயே பாஜவில் இருந்து வருகிறார்.

Advertisement

தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து பாஜ சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறுவது இல்லை.  இந்த நிலையில் கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கரூர் பாஜ சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்’’ என்று திடீரென அறிவித்தார்.

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கும் போது, அண்ணாமலை எப்படி இது போன்று எப்படி அறிவிக்க முடியும் என்று பாஜவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை தலைவராக இருக்கும் போது நான் மட்டும் தான் பேட்டியளிப்பேன். நான் சொல்வது தான் கட்சியின் கருத்து. மற்ற தலைவர்கள் சொல்வது அவர்களின் சொந்த கருத்து என்று தெரிவித்து வந்தார்.

இப்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத அண்ணாமலை எப்படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். அண்ணாமலையின் தனிப்பட்ட அறிவிப்பு தொடர்பாக டெல்லி தலைமைக்கும் புகாராகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement