தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை

சென்னை: இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். இதையடுத்து பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சில முறையற்ற விதிகளை நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும்போது ஆதாரை ஏற்க வேண்டும். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் பற்றி உரிய விளக்கம் அளிக்கவில்லை. பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றால் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related News