தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை; சேலத்தில் நள்ளிரவில் 200 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி: ஏற்காட்டில் அதிகபட்சமாக 121.4 மி.மீ. பதிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பரவலாக விடிய, விடிய கனமழை பெய்தது. இம்மழையால் சேலம் மாநகரில் தாழ்வான இடங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக ஏற்காட்டில் 121.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே சேலத்தில் கடும் வெயில் நீடித்தது. மாலை குளிர்காற்று வீசியது. இரவு 9.15 மணியளவில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இடியுடன் கூடிய கனமழை பெய்யத்தொடங்கியது. இம்மழை விடிய, விடிய நீடித்தது. கனமழை காரணமாக சேலம் மாநகரத்தில் 40வது வார்டு பச்சப்பட்டி அசோக்நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்தது.
Advertisement

இப்பகுதியில் நெசவு ெதாழிலாளிகள் அதிகளவில் உள்ளனர். மழைநீர் சூழந்ததால்நெசவு செய்ய பயன்படும் பாவுநூல் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்தன. நள்ளிரவில் மழைநீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலை இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். வீடுகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் விடிய, விடிய மழைநீர் முழங்கால் அளவுக்கு ஓட்டியது. இதனால் கிச்சிப்பாளையம், களரம்பட்டி, நாராயணநகர், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சம் ஏற்காட்டில் 121 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

 

Advertisement