விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை; சேலத்தில் நள்ளிரவில் 200 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி: ஏற்காட்டில் அதிகபட்சமாக 121.4 மி.மீ. பதிவு
Advertisement
இப்பகுதியில் நெசவு ெதாழிலாளிகள் அதிகளவில் உள்ளனர். மழைநீர் சூழந்ததால்நெசவு செய்ய பயன்படும் பாவுநூல் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்தன. நள்ளிரவில் மழைநீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலை இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். வீடுகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் விடிய, விடிய மழைநீர் முழங்கால் அளவுக்கு ஓட்டியது. இதனால் கிச்சிப்பாளையம், களரம்பட்டி, நாராயணநகர், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சம் ஏற்காட்டில் 121 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Advertisement