தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகளை கொன்று தந்தை தற்கொலை: பழநி அருகே சோகம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (55). கொத்தனார். மனைவி விஜயா (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள், மகனுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். மற்றொரு மகள் தனலட்சுமி (23) திருமணம் ஆகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. மகள் உடல்நலம் சரியாகாததால் பழனியப்பன் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், விஜயா தனது மகன் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். வீட்டில் பழனியப்பன், தனலட்சுமி மட்டும் இருந்தனர். திருச்செந்தூர் சென்றவர்கள் செல்போனில் பழனியப்பனை தொடர்பு கொண்டனர்.

அவர் போனை எடுக்காததால் நேற்று காலை பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு, போனை பழனியப்பனிடம் தருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் பழனியப்பனின் வீட்டிற்கு வந்துபார்த்த போது தனலட்சுமி சடலமாகவும், பழனியப்பன் தூக்கில் தற்கொலை செய்து கொண்டும் கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில், மகளை கொன்று விட்டு பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.