தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷக் காளான் விருந்து வைத்து மாமனார், மாமியார், உறவினரை கொன்ற மருமகள் குற்றவாளி: ஆஸ்திரேலியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Advertisement

சிட்னி: விஷக் காளான் விருந்து வைத்து மாமனார், மாமியார், உறவினரை கொன்ற மருமகளை குற்றவாளி என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த எரின் பேட்டர்சன் என்ற பெண், தனது கணவரின் குடும்பத்தினருக்கு வீட்டில் விருந்தளித்துள்ளார். அந்த விருந்தில், விஷத்தன்மை கொண்ட கொடிய ‘அமானிட்டா’ வகைக் காளான்களை உணவில் கலந்து கொடுத்துள்ளார். இந்த உணவைச் சாப்பிட்ட அவரது மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெய்ல் பேட்டர்சன் மற்றும் உறவினர் ஹீதர் வில்கின்சன் ஆகியோர் உயிரிழந்தனர். வில்கின்சன் என்ற மற்றொரு உறவினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் ெதாடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையில் இறந்தவர்களின் உடலில் ‘அமாடாக்சின்’ என்ற கொடிய விஷம் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில், எரின் பேட்டர்சன் தனது குடும்பத்தினருக்கு ‘அமானிட்டா’ வகைக் காளான்களை உணவில் கலந்து கொடுத்து கொன்றது உறுதியானது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ‘மஷ்ரூம் மர்டர்’ வழக்கில், 11 வாரங்கள் நடந்த நீண்ட விசாரணைக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது எரின் பேட்டர்சன் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் வேண்டுமென்றே ெகாலை செய்யவில்லை; அப்போது நடந்தது ஒரு விபத்து’ என்று கூறி வாதிட்டார். ஆரம்பகட்ட விசாரணையில் அவர், உணவில் விஷக் காளான் கலந்ததை மறைக்கவும் முயற்சி செய்தார்.

ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், இது திட்டமிட்ட கொலை என்பதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், எரின் பேட்டர்சன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடும்பத்தினருக்கு விருந்து என்ற பெயரில் நடந்த இந்தக் கொடூரக் கொலை, ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement