தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது: திடுக்கிடும் தகவல் அம்பலம்

கோவை: பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகனை போலீசார் கைது செய்தனர். அவரை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல் வௌியாகி உள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த 6 மாதமாக பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் அறிமுகமாகி காரில் அழைத்து சென்று, மற்றொரு நண்பருடன் சேர்ந்து மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், பிரேஸ்லெட், செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.90 ஆயிரத்தையும் ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர். பின்னர் தனுஷ், அவரை கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்து அனுப்பி வைத்தார். அங்கிருந்து இளம்பெண் தகவலின்படி சகோதரி வந்ததும் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement

ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்த தனுஷ் திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியன் மகன் என்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்ததையடுத்து தனுஷ் தலைமறைவானார். போலீசார் தீவிரமாக தேடி தனுசை நேற்று கைது செய்தனர். தற்போது அவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் கோவை ஈச்சனாரி பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பம்பிள் உள்ளிட்ட சில டேட்டிங் ஆப்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை குறி வைத்து பழகி உள்ளார். இதற்காக விதவிதமான புகைப்படங்களை தனது புரொபைல் படமாக வைத்து இருந்தார். அதை பார்த்த பெண்கள் அவரிடம் மயங்கி பேசியுள்ளனர்.

அவர்களிடம் தான் வழக்கறிஞருக்கு படித்து வருவதாகவும், கோவை அரசு வழக்கறிஞருக்கு உதவியாளராக இருப்பதாகவும், தந்தை போலீசில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களை குறி வைத்து நைசாக பேசி லாங் டிரைவ் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளார். காரின் பின்சீட்டில் நண்பரை மறைவாக அழைத்துச் சென்று, சரியான சந்தர்ப்பத்தில் பெண்களை மிரட்டி நகை பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் குடும்ப சூழ்நிலையால் புகார் அளிக்காமல் இருந்தது தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிக்கு சாதகமாகி உள்ளது. இதனால் தனுஷ் தனது முழு நேர தொழிலாக இதையே செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷின் நண்பரையும் தேடிவருகின்றனர்.

Advertisement

Related News