தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கு; தஷ்வந்த் மரண தண்டனை ரத்து: விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2017ல் சென்னை அடுத்த போரூரில் அண்டை வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2017 பிப்ரவரியில் கைதான தஷ்வந்த் 2017 டிசம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தப்பிக்க பணம் தராத தாய் சரளாவை அடித்துக் கொன்றார். தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையை செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்தது. செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்திருந்தது. மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறி உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ ஆய்வும் ஒத்துபோகவில்லை. மரண தண்டனையை எதிர்த்த வழக்கில் குற்றத்தை உறுதி செய்ய தவறவிட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement