தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாங்க தர்காவை கேட்கல... தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என்பது மலையின் உச்சியில் கிடையாது. யாருமே தர்காவுக்கு பக்கத்திலே தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் கொஞ்சம் கீழே இருக்கக்கூடிய தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பது தான் இன்றைக்கு போடப்பட்டிருக்கக்கூடிய ரிட் மனுவின் சாராம்சம். மலையின் உச்சியில் தர்கா இருக்கிறது. அதை யாரும் வேண்டும் என்று கேட்கவில்லை. அது வேறு. தீபத்தூண் என்பது இரண்டு மலையில் இருக்கக்கூடிய சிறிய மலையின் உச்சியில் தீபத்தூண் இருக்கிறது. அதை தான் இன்றைக்கு கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்து இருக்கிறார். 1.11.2025ல் கொடுக்கிறார். கார்த்திகை தீபம் 3ம் தேதி வருகிறது.

Advertisement

இரண்டாம் தேதி கோயில் இஓ பெயருக்கு ஒரு அப்பீல் போட்டு வைக்கிறார். கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டிய இஓ அப்பீல் பண்ண வேண்டிய அவசியம் என்ன?

மாநில அரசின் காவல்துறை அதிகாரிகள் தன்னுடைய கடமையை சரியாக செய்யவில்லை. அந்த கடமையை சரியாக செய்யாத காரணத்தால் தான் சிஎஸ்எப்பை அனுப்புறேன் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கமாண்டன்ட் கூட போங்க. 10 பேர் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதில் எதுவும் தவறாக இல்லை. போடப்பட்ட 144 டிஸ்மிஸ் ஆகிறது. அதன் பிறகு நாங்கள் தீபத்தை ஏற்ற செல்லும் போது தடுத்து இருக்கிறார்கள். தடுத்தது மட்டுமல்ல, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தொண்டர்களை சட்டவிரோதமாக கைது செய்து இருக்கிறார்கள். இது நீதிபதி கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்புக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement