தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்ஹா பற்றி அவதூறு, மதமோதல் முயற்சி பாஜ மாநில நிர்வாகிகள் கைது

சென்னை: திருப்பரங்குன்றம் தர்ஹா பற்றி அவதுறு பதிவு, மதமோதலை ஏற்படுத்த முயன்றதாக பாஜ மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி (40). பாஜ ஆன்மிக பிரிவு மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தர்ஹா குறித்தும் பிரச்னை ஏற்படும் விதமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நம்புதாளையில் அவரது வீட்டில் வைத்து குருஜியை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதேபோல், பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆற்காடு டவுன் போலீசில் மேல்விஷாரம் நலச்சங்க நிர்வாகி நிஷாத் அஹமத் கடந்த மாதம் 29ம் தேதி அளித்த புகாரில் இஸ்லாமிய சமுதாயத்திற்கிடையே மோதலை தூண்டும் வகையிலும் அனைத்து கட்சிகளின் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் மேல்விஷாரம் செல்வதற்காக வந்த வேலூர் இப்ராஹிமை ஆற்காடு பாலாறு பழைய பாலம் அருகே ராணிப்பேட்டை போலீசார் தடுத்து நிறுத்தி அவரையும் நிர்வாகிகள் 3 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Advertisement

Related News