தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் ஆபத்தான பள்ளம்-மூடபொதுமக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரின் பிரதான சாலையில் பள்ளம் ஒரு மாதமாக மூடப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலையின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இருந்து ஓம் சக்தி நகர் வரை செல்லும் சாலையின் ஓரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியதை சீரமைப்பதற்காக நகராட்சி சார்பில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் பணி முழுமை அடையாததால் ஒரு மாதமாக பள்ளம் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, பள்ளத்தில் தேங்கி குளம் போல் கிடப்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.

கழிவுநீர் மற்றும் பள்ளத்தால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் இப்பகுதியில் 3 பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.

இதுபோன்று குடிநீர் என நினைத்து கழிவுநீர் பகுதிக்கு செல்லும் கால்நடைகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதத்தை முழுமையாக சீரமைத்து பள்ளத்தை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement