தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்பாதி கிராமத்தில் சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

*விபத்துக்கு முன் அகற்ற வலியுறுத்தல்
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புலவர் நத்தம் கிராம ஊராட்சி கீழ்பாதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புலவர் நத்தம் கிராம ஊராட்சி கீழ்பாதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து பக்கவாட்டு சுவரில் ஓட்டை விழுந்துள்ளது. இதிலிருந்து நாள் முழுவதும் தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீரும் முழுமையாக கிடைக்கவில்லை. அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீராமைத்து தர கோரி பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தும் இது நாள் வரை சரி செய்திட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வீணாகி வருவதால் யாருக்கும் பயனின்றி உள்ளது. எனவே குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து யாரும் விபத்தில் சிக்கிக் கொள்ளும் முன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement