தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவூரில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்

*ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் மனு

Advertisement

ஆரணி : ஆரணி வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆர்டிஓ நேர்முக உதவியாரள் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, நேர்முக உதவியாளர் மனோகரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி அடுத்த ராகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். மேலும், சேவூரில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையில் இருந்து பொருமாள் கோயில் வரை கடந்த சில வாரங்களாக மின் விளக்குகள் பழுதடைந்து, எரியாமல் இருந்து வருகிறது.

இதனால், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வரும்போது, போதிய வெளிச்சம் இல்லாததால், கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ரகுநாதபுரம் கிராமத்தில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை அகற்றி புதிய மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, கூட்டத்தில் பட்டா, நிலத்தகராறு உள்ளிட்டவை தொடர்பாக 66 கோரிக்கை மனுக்களை நேர்முக உதவியாளர் மனோகரன் பெற்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில், வருவாய் மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News