தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘சேதங்களை சரி செய்து தருகிறோம்’ சென்னை மாநகராட்சியில் தவெக வாக்குறுதி மனு

சென்னை: ஆர்ப்பாட்டத்தின்போது தொண்டர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாக தவெக சார்பில் சென்னை மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த அதில் இரண்டே முக்கால் நிமிடமே விஜய் பேசினார்.
Advertisement

கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள், சாலை தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தினர். பூந்தொட்டிகளை உடைத்து நொறுக்கினர். சாலைகளையும் சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக சென்ற பொதுமக்களையும் மறித்து வாகனங்களில் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக சென்னை மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் கொடுத்தால், போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்ற கருத்து நிலவியது. இதுகுறித்து தகவல் வெளியானதும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தவெக சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், தவெக ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை நாங்களே சரி செய்து கொடுக்கிறோம். சேத விவரங்களை தெரிவித்தால் அதற்கான பணத்தை கட்டிவிடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News