தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அணைக்கட்டு அருகே மலைக்கிராமத்தில் உள்ள உறைவிட பள்ளி பாழடைந்த உணவுக்கூட கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும்: புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலையில் பழுதடைந்த உறைவிட பள்ளி மதிய உணவுக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு 45க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்க அருகே உள்ள சிமெண்ட் ஷீட் கட்டிடத்தில் உணவு சமைக்கப்படுகிறது. ஆனால் இந்த பழைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும் என பொதுமக்கள் பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்திலும் மேற்பகுதி சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விழுந்து வருகிறது. அதனை புதுப்பிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரேகா, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர்களிடமும், அணைக்கட்டு பிடிஓக்களிடமும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லாததால், வேறு வழியின்றி அந்தக்கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் சுவர்கள் சேதமாகியுள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாழடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement