தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலித்துகளுக்கு எதிரான கொடூரங்கள் எடப்பாடி, விஜய் கண்டிக்கவே இல்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு

பெரம்பலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஆணவ படுகொலையை கண்டித்தும், தேசிய அளவில் தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: ஆணவ படுகொலை தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் சம்பவம் இல்லை, டெல்லியை சுற்றியுள்ள மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் ஜாதி விட்டு, ஜாதி திருமணம் செய்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்லுதல், கொடூரமான முறையில் தாக்கி கொல்லுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் தான் தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டுமென விசிக 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

Advertisement

தலித்துகளுக்கு எதிராக இது போன்ற கொடூரங்கள் நடக்கும் போது புதிய கட்சிகள் வாய் திறப்பது கிடையாது. நடிகர் விஜய் இதனை கண்டிக்க கூட இல்லை. இந்த ஆணவ படுகொலை நடந்த பகுதிக்கு அருகில் தான் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சென்று வந்தார். ஆனால் சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லவில்லை, கண்டிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலும் சொல்லவும் இல்லை.அதிமுக நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் தலித்துகள் ஓட்டுகளை எப்படியாவது வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த ஆணவ படுகொலைக்கு குறிப்பிட்ட ஜாதிதான் காரணம், குறிப்பிட்ட கட்சி தான் காரணம், குறிப்பிட்ட ஆட்சி தான் காரணம் என நான் பேசவில்லை. பாஜ தான் காரணம் எனவும் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் உருவாகி 100 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக இந்த காட்டு மிராண்டித்தனமான செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அண்ணா, ஆலய நுழைவு சட்டம் இயற்றினார். கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றினார். அதே போல் ஆணவ கொலைக்கு தனி சட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயற்ற வேண்டும். தயக்கம் தேவையில்லை, அச்சம் தேவையில்லை. அண்ணாவை போல், கலைஞரை போல், தைரியமாக ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவேண்டும். மீண்டும் நீங்கள் முதலமைச்சராக அரியணையில் அமர்வீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News