பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 1.50 லட்சம் கிலோ அரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்
Advertisement
* ஒரு மாத ஊதியம் முதல்வர் வழங்கினார்
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
Advertisement